சனாதன தர்மம்

சனாதன தர்மம்

வியாழன், 27 மார்ச், 2014

சங்க இலக்கியம் போற்றும் வேதங்கள்

பூவினுள் பிறந்தோன் நாவினுள் பிறந்த
நான்மறைக் கேள்வி நவில் குரல் எடுப்ப
ஏம ஆன் துயில் எழிதல் அல்லதை,
வாழிய வஞ்சியும் கோழியும் போலக்
கோழியின் எழாது, எம் பேர் ஊர் துயிலே.
பரிபாடல்-திரட்டு 8:7-12

பூவினுள் பிறந்தோன்- பிரம்மா
நான்மறைக் கேள்வி நவில் குரல் எடுப்ப- ரிக்,
யஜுர், சாம அதர்வண வேதங்களின் முழக்கம்
அந்தணர் ஓத
வஞ்சியும் -சேர தலைநகர்- வஞ்சி
கோழியும்- உரையூர்- சோழ தலைநகர்
கோழியின் எழாது- சேவல் கூவலில் எழ

பாண்டி நாட்டு தலைநகர்
மதுரைவாசி சொல்கிறா: சேர தலைநகர்-
வஞ்சிவாழ் மக்களும், உரையூர் சோழ
தலைநகர்வாழ் மக்களும் தினமும்
அதிகாலை சேவல் கூவலில் எழுகின்றனர்.

நாங்கள் அதிகாலையில் அந்தணர் ரிக், யஜுர்,
சாம அதர்வண வேதங்களின் ஓதும் முழக்கம்
கேட்டு எழுகிறோம் என
பெருமை கொள்கின்றார்.

சங்க இலக்கியமான அகநானூறு 141-
ஆம் பாடலில் தீபாவளி.

மழை கால் நீங்கிய மகா விசும்பில்
குறுமுயல் மறுநிறம் கிளர்மதி நிறைந்த
அறுமீன் சேரும் அகவிருள் நடுநாள்
மறுகு விளக்குறுத்து மாயை தூக்கிப்
பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய
விழவுடன் அயர வருகத்தில் அம்ம !

அகநானூறு 141-ஆம் பாடல் இயற்றியவர்
நக்கீரர்
அறுமீன் சேரும் அகவிருள் நடுநாள்-
என்பது அமாவாசை நாளாம்.
கொல்லப்பட்ட அரக்கன் –
தீமை வெல்லப்பட்டது.
இருள் நீங்கியது. ஓளி வருகிறதின்
அடையாளமாக சங்க காலத்தில் விளக்குகள்
ஏற்றி கொண்டாடினர்.
அறிவியல் ஞானம் பெருக- தீமை அழிவதைப்
பட்டாசு கொழுத்தி
கொண்டாடுகிறோம்.
தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

இருதமிழ் மன்னர்கள் ஒற்றுமையாய் காணுதல்
அரிது என்பதை விளக்க சோழன் குராப்பள்ளித்
துஞ்சிய பெருந்திருமாவளவனும்,
பாண்டியன் வெள்ளியம்பலத்து துஞ்சிய
பெருவழுதியும் ஒன்றாக
கண்டதை காவிரிப்பூம்பட்டினத்து
காரிக்கண்ணனார் புறநானூறில்
பாடுகின்றார்:
இருப்பெருந் தெய்வங்கள்
கண்ணனையும் பலதேவனையும் ஒன்றாக
பார்ப்பது போலுள்ளது என்கின்றார்.
பால்நிற உருவின் பனைக்கொடியோனும்
நீல உருவின் நேமியோனும் என்று
இருபெருந் தெய்வமும் உடன்
நின்றாஅங்கு -புறநானூறு்:58:14 – 16

செங்கட்காரி! கருங்கண் வெள்ளை!
பொன்கட் பச்சை! பைங்கண் மாஅல்! –
(பரி.3:81-82)

சிவந்த கண்களுடைய வாசுதேவனே! கரிய
கண்களையுடைய சங்கருஷணனே! சிவந்த
உடம்பினை உடைய பிரத்யும்நனே! பசிய
உடம்பினையுடைய அநிருத்தனே! என்பது இதன்
பொருளாகும்.
புவ்வத்தாமரை புரையும் கண்ணன்
வௌவல் கார்இருள் மயங்குமணி மேனியன்
எவ்வயின் உலகத்தும் தோன்றி அவ்வயின்
மன்பது மறுக்கத் துன்பம் களைவோன்-
பரிபாடில்.15:49-52

கண்ணன் இந்த உலகின் துன்பத்தை போக்க இந்த
பூமியில் அவதாரமாக வந்தருளும் முழுமுதல்
கடவுளாம்.
சங்க இலக்கியமாகிய பரிபாடலில்
கண்ணனின் லீலைகளைச் சுட்டி அவனை மாயோன்,
திருமால் என்று போற்றும் பாடல்களும்,
அவனது கோயில்கள் பற்றிய குறிப்புக்களும்
உள்ளன.
சிலப்பதிகாரத்தில், மதுரைப் புறஞ்சேரியில் உள்ள
ஆயர்கள், ஆய்ச்சிகள் அனைவரும்
குரவையிட்டு கண்ணனை ஆராதிக்கிறார்கள்.
மூவுலகும் ஈரடியான்
முறைநிரம்பா வகைமுடியத் 1
தாவியசே வடி சேப்பத் தம்பியொடுங்
கான்போந்து
சோவரணும்
போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன்சீர் கேளாத செவி என்ன
செவியே
திருமால்சீர் கேளாத செவி என்ன
செவியே;
பெரியவனை மாயவனைப் பேருலக
மெல்லாம் 2
விரிகமல உந்தியுடை விண்ணவனைக் கண்ணும்
திருவடியும் கையும் திருவாயும் செய்ய
கரியவனைக் காணாத
கண்ணென்ண கண்ணே
கண்ணிமைத்துக் காண்பார்தம்
கண்ணென்ண கண்ணே;
மடந்தாழு நெஞ்சத்துக் கஞ்சனார்
வஞ்சம்
கடந்தானை நூற்றுவர்பால் நாற்றிசையும்
போற்றப்
படர்ந்தா ரணமுழங்கப் பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை ஏத்தாத நாவென்ன
நாவே
நாராயணா வென்னா
நாவென்ன நாவே;
- சிலப்பதிகாரம் 17. ஆய்ச்சியர் குரவை
கொல்லப்பட்ட கொடுங்கோல்
அரக்கன் – தீமை வெல்லப்பட்டது.
இருள் நீங்கியது. ஓளி வருகிறதின்
அடையாளமாக சங்க காலத்தில் விளக்குகள்
ஏற்றி கொண்டாடினர்.
அறிவியல் ஞானம் பெருக- தீமை அழிவதைப்
பட்டாசு கொழுத்தி
கொண்டாடுகிறோம்.
அனைத்து மன்ற உறவுகளுக்கும்
எனது தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
ஆசிரியர் நல்லுவந்தனார் பரிபாடல் 11ம்
பாடலில் வையை என வைகை ஆற்றின் சிறப்பைக்
கூறுகையில்
பரிபாடல்2:76-87
ஞாயிறு காயா நளி மாரிப் பின் குளத்து,
மா ஆருந் திங்கள் மறு நிறை ஆதிரை
விரிநூல் அந்தணர் விழவு தொடங்க,
புரி நூல் அந்தணர் பொலம் கலம்
ஏற்ப,
‘வெம்பாதாக, வியல் நில வரைப்பு!‘ என
80
அம்பா ஆடலின் ஆய் தொடிக்
கன்னியர்,
முனித் துறை முதல்வியர் முறைமை காட்ட,
பனிப் புலர்பு ஆடி, பரு மணல் அருவியின்
ஊதை ஊர்தர, உறை சிறை வேதியர்
நெறி நிமிர் நுடங்கு அழல் பேணிய சிறப்பின்,
85
தையல் மகளிர் ஈர் அணி புலர்த்தர,
வையை! நினக்கு மடை வாய்த்தன்று.
மையாடல் ஆடல் மழ புலவர் மாறு எழுந்து,
பொய் ஆடல் ஆடும் புணர்ப்பின் அவர்,
அவர்
தீ எரிப் பாலும் செறி தவம் முன் பற்றியோ,
90
தாய் அருகா நின்று தவத் தைந் நீராடுதல்?
நீ உரைத்தி, வையை நதி!
மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரம்
அன்று வேதமோதும் அந்தணர்கள்
சிவபெருமானிற்கு திருவிழா செய்யத்
தொடங்கினர்.
முப்புரி நூல் அணிந்த அந்தணர்
பொன்கலத்தை ஏந்தி சென்றனர்.
அம்பா ஆடல் செய்யும் கன்னிப்
பெண்கள்- முதிய அந்தணப்
பெண்கள் வழிகாட்ட அதிகாலையில்
நீராடினர்.
அதிகாலையில் நீராடிய இளம்பெண்கள்,
மார்கழியின் குளிர் வாட்ட, கரையில்
வேதமந்திரங்கள் கூறி வளர்த்த
வேள்வி அக்னியின் அருகில் சென்று தங்கள்
ஈர ஆடையை காயச் செய்தனர். அந்தணர்
வேத வேள்விகளால் மழை தொடர வைகை நீ
பெருகுகிறாய்.
இவை மார்கழி மாதத்தின் பாவை நோன்பின்
தொன்மையையும் திருவாதிரை பண்டிகை
கொண்டாடுதலின்
வழமையையும் மெய்பிக்கின்றது.
பரிபாடல்-திரட்டு 2ம் பாடல் வையை என்ற
தலைப்பில்
தலைவன் கூற்று
‘புனலூடு போவது ஓர் பூ மாலை கொண்டை,
எனலூழ் வகை எய்திற்று’
என்று ஏற்றுக்கொண்ட
புனலூடு நாடு அறியப் பூ மாலை அப்பி,
நினைவாரை நெஞ்சு ஆடுக்கண்
செய்யும் கனல்புடன்,
கூடாமுன், ஊடல் கொடிய திறம்
கூடினால் …55
ஊடாளோ? ஊர்த்து அலர் வந்து ஊர்ந்து,
என ஆங்கு-
‘ஈப் பாய் அடு நறாக் கொண்டது,
ஆவ் யாறு’ எனப்
பார்ப்பார் ஒழிந்தார், படிவு.
‘மைந்தர் மகளிர் மண விரை தூவிற்று’ என்று, 60
அந்தணர் தோயலர், ஆறு,
‘வையை தேம் மேவ வழுவழுப்பு உற்றென’
ஐயர், வாய்பூசுறார், ஆறு.
-பா¢பாடல்-திரட்டு 2:50-63
அந்தணர்கள் எல்லா மக்களும்
சேர்ந்து கொண்டாடும் புதுநீர்
விழாவின் போது, கேளிக்கைகளில்
கலந்துகொள்ளாது ஒதுங்எயே
வாழ்ந்தனர். கள் குடித்தவர்கள் உமிழ்கையில்
கள்ளும்; பெண்களும் சிறுவர்கள்
பயன்படுத்தும் நறுமணப் பொருட்கள்,
வழுவழுப்பான தேன் முதலியவை வைகை ஆற்றின்
புதுப் புனலில் கலந்து வந்தது ஆகையால்
ஒழுக்க நெறிப்பட்ட பார்ப்பனர்கள் புதுப்
புனலின் போது வைகையில் குளிப்பதோ- வாய்
கொப்பளிப்பதோ இல்லை.
இங்கே பார்ப்பனர்- அந்தணர்-ஐயர் என்ற
மூன்று பதங்களும் பிராமணர்களைக் குறிக்க
சங்க காலத்திலே இருந்தது எனத்
தெளிவாகிறது.
மேலும் சங்க காலத்தில் தமிழகத்தின்
பக்திநிலை பற்றியும் உறுதி செய்கிறது.

தொல்காப்பிய
நூற்பா களவியல்-1

இன்பமும் பொருளும் அறனும்
என்றாங்கு
அன்பொடு புணர்ந்த
ஐந்திணை மருங்கின்
காமக் கூட்டம் காணும் காலை
மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்
துறை அமை நல் யாழ்த் துணைமையோர் இயல்பே-
தமிழர் வீடுபேற்றுக்கு – அறம்-பொருள்-
இன்பம்
இவற்றை அன்போடு இணைத்து காதலர்கள்
இணையுமுன் வைதீகர்கள் கூறும் 8 வித திருமண
முறைகளான – 1. பிரம்ம முறை 2. தைவ 3. ஆர்ஷ 4.
பிராஜாபத்யம் 5அஸ¥ர, 6.கந்தர்வ
7.ராக்ஷஸ மற்றும் 8. பைசாச முறை, இவற்றில்
கந்தர்வமுறையில் மணம் செய்தபின்
இணைவர்.
துறை அமை நல் யாழ்த் துணைமையோர்- கந்தர்வர்கள்.
இறையனார் அகப்பொருளுரை
நேரடியாக கந்தர்வர்கள் என்கிறது.
அன்பின் ஐந்திணைக் களவென்பது படுவது
அந்தணர் அருமறை மன்றல் எட்டனுள்
கந்தர்வ வழக்கம் எனமனார் புலவர்-
இறையனார் அகப்பொருளுரை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக